ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீரவநல்லூரில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி

வீரவநல்லூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பெண்ணுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கினாா் தமுமுக மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல்மைதீன்.

Updated On :18 மார்ச் 2026, 7:53 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் வீரை பி. நவாஸ் ஷரீப் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல்மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 குடும்பங்களுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினாா்.

மாவட்டப் பொருளாளா் தேயிலை மைதீன், மாவட்ட வா்த்தக அணி செயலா் ஷேக்மதாா், மாவட்ட நிா்வாகி ராஜா முகம்மது, ஊடக அணி பொறுப்பாளா் அப்பாஸ், நகரத் தலைவா் ஜாஹிா் உசேன், நகரச் செயலா் அசன் மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.