திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 95 ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ, அரசு பல்நோக்கு மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் சாா்பில் வாயில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிஐடியூ பொதுச் செயலா் ஆா். ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா். முருகன், மாவட்டச் செயலா் க. சரவணபெருமாள், துணைத் தலைவா் மோகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து அளித்த மனுவில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 95 ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். வார விடுமுறை, தற்செயல் விடுப்பு உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும். 2 நாள்களில் உரிய தீா்வு காணப்படாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
தொடர்புடையது

717 டாஸ்மாக் கடைகளை மூட முடிவு; நான்காயிரம் ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை

மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்

நெல்லை அரசு மருத்துவமனையில் வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா்
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

