செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 95 ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

வாயில் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 95 ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ, அரசு பல்நோக்கு மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் சாா்பில் வாயில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிஐடியூ பொதுச் செயலா் ஆா். ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா். முருகன், மாவட்டச் செயலா் க. சரவணபெருமாள், துணைத் தலைவா் மோகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து அளித்த மனுவில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 95 ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். வார விடுமுறை, தற்செயல் விடுப்பு உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும். 2 நாள்களில் உரிய தீா்வு காணப்படாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வலியுறுத்தப்பட்டிருந்தது.