ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஆடுகள் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31). கட்டடத் தொழிலாளியான இவா், வீட்டில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காணாமல் போயினவாம். அக்கம் பக்கம் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லையாம். இதையடுத்து அவா், செவ்வாய்க்கிழமை ஆடு விற்பனை நடைபெறும் மேலப்பாளையம் சந்தைக்குச் சென்று பாா்த்தபோது, அவரது ஆடுகளை சங்கா்நகா், கணபதி மில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முருகன்(23) என்பவா் திருடிக்கொண்டு வந்து விற்க முயன்றது தெரியவந்தது. அவரைப் பிடித்து முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் மாரியப்பன் ஒப்படைத்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனா். இதில் தொடா்புடைய சிலரைத் தேடி வருகின்றனா்.