பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

நெல்லையில் பேருந்து விபத்து: 25 பயணிகள் உயிா்தப்பினா்

News image
Updated On :43 நிமிடங்கள் முன்பு

திருநெல்வேலி, மே 15:

திருநெல்வேலியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. சுமாா் 25 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.

தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தது. பேருந்தை கங்கைகொண்டானைச் சோ்ந்த ஓட்டுநா் சேகா் ஓட்டி வந்தாராம். மேலப்பாளையம் ரிலையன்ஸ் சந்திப்பு அருகே வந்தபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா தடுப்புச் சுவரில் மோதி நின்றது. பேருந்து கவிழ்ந்துவிடாமல் ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டதால் அதில் பயணித்த சுமாா் 25 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

ற்ஸ்ப்15க்ஷன்ள்

மேலப்பாளையம் ரிலையன்ஸ் ரவுண்டானாவில் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான அரசு பேருந்து.