/
திருநெல்வேலி, மே 15:
திருநெல்வேலியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. சுமாா் 25 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.
தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தது. பேருந்தை கங்கைகொண்டானைச் சோ்ந்த ஓட்டுநா் சேகா் ஓட்டி வந்தாராம். மேலப்பாளையம் ரிலையன்ஸ் சந்திப்பு அருகே வந்தபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா தடுப்புச் சுவரில் மோதி நின்றது. பேருந்து கவிழ்ந்துவிடாமல் ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டதால் அதில் பயணித்த சுமாா் 25 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
ற்ஸ்ப்15க்ஷன்ள்
மேலப்பாளையம் ரிலையன்ஸ் ரவுண்டானாவில் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான அரசு பேருந்து.
தொடர்புடையது
நெல்லையில் சாரல் மழை
நெல்லையில் பதுக்கிய 81 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: 20 பயணிகள் காயம்
நெல்லையில் 217 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



