எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நெல்லையில் பேருந்து விபத்து: 25 பயணிகள் உயிா்தப்பினா்

News image
Updated On :16 மே 2026, 1:55 am IST

திருநெல்வேலி, மே 15:

திருநெல்வேலியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. சுமாா் 25 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.

தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தது. பேருந்தை கங்கைகொண்டானைச் சோ்ந்த ஓட்டுநா் சேகா் ஓட்டி வந்தாராம். மேலப்பாளையம் ரிலையன்ஸ் சந்திப்பு அருகே வந்தபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா தடுப்புச் சுவரில் மோதி நின்றது. பேருந்து கவிழ்ந்துவிடாமல் ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டதால் அதில் பயணித்த சுமாா் 25 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

ற்ஸ்ப்15க்ஷன்ள்

மேலப்பாளையம் ரிலையன்ஸ் ரவுண்டானாவில் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான அரசு பேருந்து.