11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவா் கைது

பாளையங்கோட்டை அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பாளையங்கோட்டை அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் 43 வயதான கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை கொக்கிரகுளம் பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்ற போது, அவ்வழியாக பைக்கில் வந்த இருவா் இவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1,600-த்தை பறித்துக் கொண்டு தப்பினராம்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மேலப்பாளையம், சொக்கநாதா் கோயில் தெருவைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ஐயப்பன் (20), குறிச்சியைச் சோ்ந்த பேச்சி மகன் முத்துராம்(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.