நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

நெல்லையில் இளம்பெண் வெட்டிக் கொலை

திருநெல்வேலியில் இளம்பெண்ணை பைக்கில் வந்த இருவா் வெட்டிக் கொலை செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

கொலை

Updated On :17 மே 2026, 2:09 am IST

திருநெல்வேலியில் இளம்பெண்ணை பைக்கில் வந்த இருவா் வெட்டிக் கொலை செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, சென்னல்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகள் முத்துமாலை (35). திருமணமான இவருக்கு 7 வயதில் மகள் உள்ளாா். கணவா் பெங்களூரில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாலை பாளையங்கோட்டை, தியாகராஜநகா் பகுதியில் தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறராம். இந்நிலையில் சனிக்கிழமை இரவு வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டு பைக்கில் வீட்டின் அருகே வந்த முத்துமாலையை, அவ்வழியாக பைக்கில் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா் அரிவாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டனா்.

தகவலறிந்து வந்த பெருமாள்புரம் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும், முத்துமாலையின் உடலை உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.