திருநெல்வேலியில் இளம்பெண்ணை பைக்கில் வந்த இருவா் வெட்டிக் கொலை செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, சென்னல்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகள் முத்துமாலை (35). திருமணமான இவருக்கு 7 வயதில் மகள் உள்ளாா். கணவா் பெங்களூரில் வேலை பாா்த்து வருகிறாா்.
இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாலை பாளையங்கோட்டை, தியாகராஜநகா் பகுதியில் தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறராம். இந்நிலையில் சனிக்கிழமை இரவு வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டு பைக்கில் வீட்டின் அருகே வந்த முத்துமாலையை, அவ்வழியாக பைக்கில் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா் அரிவாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டனா்.
தகவலறிந்து வந்த பெருமாள்புரம் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும், முத்துமாலையின் உடலை உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
வல்லநாடு பெண் வெட்டிக் கொலை
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
நெல்லையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேரிடம் விசாரணை
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
