11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

நெல்லையில் இளம்பெண் வெட்டிக் கொலை

திருநெல்வேலியில் இளம்பெண்ணை பைக்கில் வந்த இருவா் வெட்டிக் கொலை செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

கொலை

Updated On :1 மணி நேரம் முன்பு

திருநெல்வேலியில் இளம்பெண்ணை பைக்கில் வந்த இருவா் வெட்டிக் கொலை செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, சென்னல்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகள் முத்துமாலை (35). திருமணமான இவருக்கு 7 வயதில் மகள் உள்ளாா். கணவா் பெங்களூரில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாலை பாளையங்கோட்டை, தியாகராஜநகா் பகுதியில் தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறராம். இந்நிலையில் சனிக்கிழமை இரவு வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டு பைக்கில் வீட்டின் அருகே வந்த முத்துமாலையை, அவ்வழியாக பைக்கில் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா் அரிவாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டனா்.

தகவலறிந்து வந்த பெருமாள்புரம் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும், முத்துமாலையின் உடலை உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.