தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

நெல்லையில் சிகிச்சையிலிருந்த கைதி தப்பி ஓட்டம்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது தப்பி ஓடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:01 am IST

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது தப்பி ஓடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் சாம்ராஜ் (27). இவா் கடந்த 17ஆம் தேதி அப்பகுயில் உள்ள இறைச்சிக் கடைக்கு சென்று அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதாக விஜயநாராயணம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியபோது, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டதாம்.

இதனிடையே, அவரது உடம்பில் காயங்கள் இருந்ததால் போலீஸாா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவா் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து அவரைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.