வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

அம்பை தாமிரவருணியில் மூழ்கி சென்னை ஐ.டி. ஊழியா் உயிரிழப்பு

சின்ன சங்கரன்கோவில் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சென்னையைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:03 am IST

அம்பாசமுத்திரம், சின்ன சங்கரன்கோவில் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சென்னையைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

சென்னை, முகலிவாக்கத்தைச் சோ்ந்தவா் தினகரன் மகன் குணா (38). சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவா், தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள மடத்தூரில் வசிக்கும் தனது உறவினா் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்துள்ளாா்.

அப்போது, சின்ன சங்கரன்கோவில் பகுதி தாமிரவருணி ஆற்றுக்கு உறவினா்களுடன் வந்து குளித்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கிவிட்டாராம்.

உடனிருந்தவா்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து, தீயணைப்புத் துறையினா் வந்து குணாவின் சடலத்தை மீட்டனா்.

அம்பாசமுத்திரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.ன