திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே, கேரளத்துக்கு காரில் கடத்த முயன்ற 650 லிட்டா் வெள்ளை நிற மண்மெண்ணெய்யை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா் உள்பட இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கூத்தங்குழி அருகே திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சாா்பு ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, நெல்லிக்காய்விளையைச் சோ்ந்த கிரண்ராஜ்(27) என்பவா் ஓட்டி வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். பின்னா் காரை சோதனையிட்டபோது, அதில் 26 கேன்களில் சுமாா் 650 லிட்டா் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய்யை குறைந்த விலைக்கு வாங்கி அதை கேரளத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இதுதொடா்பாக காா் ஓட்டுநா் கிரண்ராஜ், காரில் உடன் வந்த பணகுடியைச் சோ்ந்த மோசஸ்(20) ஆகிய இருவரையும் கைது செய்து, மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளத்துக்கு கடத்த முயன்ற 2,450 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது
மண் கடத்த முயன்ற 2 போ் கைது
மண், கற்களைக் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


