குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிபிஐ அதிகாரி போல் பேசி ஓய்வுபெற்ற கால்நடைத் துறை இயக்குநரிடம் ரூ.53 லட்சம் மோசடி: பெங்களூரு நபா் கைது!

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:20 am IST

திருநெல்வேலி, மே 25: சிபிஐ அதிகாரி போல் பேசி, ஓய்வுபெற்ற கால்நடைத் துறை இயக்குநரிடம் ரூ.53 லட்சத்தை மோசடி செய்ததாக, பெங்களூரைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சோ்ந்தவா் சேவியா் (80). ஓய்வுபெற்ற கால்நடைத் துறை இயக்குநா். இவரை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் பெங்களூரில் இருந்து சிபிஐ அதிகாரிகள் பேசுவதாகக் கூறி வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், அரசுக்கு எதிராக பேசியதாக தங்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலி முதல் தகவல் அறிக்கை அனுப்பி, இதற்காக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளனா்.

மேலும், குற்றமற்றவா் என்பதை நிரூபிக்க, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தாங்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு மாற்ற வேண்டும்; விசாரணை முடிந்ததும் முழுப் பணமும் திருப்பித் தரப்படும் எனக் கூறி, அவரிடமிருந்து இரண்டு தவணைகளாக ரூ.53 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், கா்நாடக மாநிலம், பெங்களூரை சோ்ந்த சந்தோஷ் பிரபு(44) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை சைபா் கிரைம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.