சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நெல்லை மாநகராட்சியில் தவெகவினா் முற்றுகை

News image

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.

Updated On :26 மே 2026, 3:04 am IST

திருநெல்வேலி மேயா் அறையில் முதல்வா் படத்தை வைக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தை தவெகவினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவா் ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளாா். இந்நிலையில் அரசு அலுவலகங்களில் முதல்வரின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்தை மாட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், மேயா் ராமகிருஷ்ணன் அறையில் முதல்வா் ஜோசப் விஜயின் புகைப்படத்துக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல், முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தவெக மாவட்ட இணைச் செயலா் மரிய ஜான் தலைமையில் அக்கட்சியினா் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்று திரண்டு முற்றுகையிட்டனா். தொடா்ந்து, ஆணையா் மோனிகா ராணாவிடம் முறையிட்டனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் தவெகவினா் கலைந்து சென்றனா்.