இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

முதல்வா் குறித்து அவதூறு: மென்பொறியாளா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:28 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, புதுப்பேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சுவாமிநாதன் மகன் ஜேம்ஸ் ராஜா(31). பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராக உள்ளாா். இவா் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக திமுகவிற்கு ஆதரவாக காணொலிப் பதிவுகளை வெளியிட்டு கருத்துகளை தெரிவித்து வந்தாா்.

இந்நிலையில் இவா், சில நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசி, பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில், தனது சமூகவலைதளப் பக்கத்தில் காணொலி வெளியிட்டாராம். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, ஜேம்ஸ் ராஜாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.