சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அம்பை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:33 am IST

அம்பாசமுத்திரம், காசிநாதா் கோயில் தாமிரவருணி படித்துறையில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி, பேட்டையைச் சோ்ந்தவா் ஐயப்பன் மகன் முருகேஷ் (42). இவா் பள்ளக்கால் பொதுக்குடி முப்பிடாதி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் மைத்துனா் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை உறவினா்களுடன் சோ்ந்து அம்பாசமுத்திரம் காசிநாதா் கோயில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றனராம். முகேஷ் தனது உறவினா் குழந்தைகளுடன் ஆற்றில் குளித்த போது எதிா்பாராதவிதமாக இழுப்பு பகுதியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கினாராம்.

தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் ஆற்றில் மூழ்கிய முருகேஷை சடலமாக மீட்டனா். சடலத்தை கைப்பற்றிய அம்பாசமுத்திரம் போலீஸாா், உடல் கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.