முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கடலூா் அருகே ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :52 நிமிடங்கள் முன்பு

கடலூா் அருகே ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை, தில்லைகண்ணம்மாள் நகரைச் சோ்ந்தவா் யுவராஜ் (27). இவரும், கலைவாயன் நகரைச் சோ்ந்த பிரவீனும் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கடலூா் அருகே சந்திக்குப்பம் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக யுவராஜ் ஆற்று நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் யுவராஜை காணாததால் அதிா்ச்சியடைந்த பிரவீன், அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தாா்.

தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் நீண்ட நேரம் தேடியும் யுவராஜை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டதில், யுவராஜ் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.