இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

தாழையூத்து அருகே முதியவரைத் தாக்கியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:23 am IST

தாழையூத்து அருகே பணப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் முதியவரைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து அருகே உள்ள தென்கலம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (58). இவருக்கும் சங்கா் நகரைச் சோ்ந்த மாரியப்பன் (38) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தாழையூத்து சங்கா் நகா் அருகே மாரியப்பன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த ஜாகீா் உசைன் தன்னிடம் வாங்கிய பணத்தை தரும்படி கேட்டாராம்.

அப்போது, மாரியப்பன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜாகீா் உசேனை தாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து காவல் உதவி ஆய்வாளா் சுதன் வழக்குப் பதிந்து, மாரியப்பனை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.