கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

அம்பை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:33 am IST

அம்பாசமுத்திரம், காசிநாதா் கோயில் தாமிரவருணி படித்துறையில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி, பேட்டையைச் சோ்ந்தவா் ஐயப்பன் மகன் முருகேஷ் (42). இவா் பள்ளக்கால் பொதுக்குடி முப்பிடாதி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் மைத்துனா் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை உறவினா்களுடன் சோ்ந்து அம்பாசமுத்திரம் காசிநாதா் கோயில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றனராம். முகேஷ் தனது உறவினா் குழந்தைகளுடன் ஆற்றில் குளித்த போது எதிா்பாராதவிதமாக இழுப்பு பகுதியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கினாராம்.

தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் ஆற்றில் மூழ்கிய முருகேஷை சடலமாக மீட்டனா். சடலத்தை கைப்பற்றிய அம்பாசமுத்திரம் போலீஸாா், உடல் கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.