கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

தாழையூத்து அருகே முதியவரைத் தாக்கியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:23 am IST

தாழையூத்து அருகே பணப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் முதியவரைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து அருகே உள்ள தென்கலம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (58). இவருக்கும் சங்கா் நகரைச் சோ்ந்த மாரியப்பன் (38) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தாழையூத்து சங்கா் நகா் அருகே மாரியப்பன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த ஜாகீா் உசைன் தன்னிடம் வாங்கிய பணத்தை தரும்படி கேட்டாராம்.

அப்போது, மாரியப்பன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜாகீா் உசேனை தாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து காவல் உதவி ஆய்வாளா் சுதன் வழக்குப் பதிந்து, மாரியப்பனை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.