வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

என்ஜின் பழுது: 2 மணி நேரம் தாமதமாக நெல்லை சென்றடைந்த செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில்

News image

ரயில் சேவை - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 1:35 am IST

செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் பயணிகள் ரயிலில் என்ஜின் பழுதால் 2 மணி நேரம் தாமதமாக திருநெல்வேலி சென்றடைந்தது.

செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு தினந்தோறும் 4 முறை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், செங்கோட்டையிலிருந்து - திருநெல்வேலிக்கு பயணிகள் ரயில் (56776) சனிக்கிழமை பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டது.

இந்நிலையில் என்ஜின் பழுதால் 3.10 மணிக்கு பாவூா்சத்திரம் நிலையத்துக்கு வந்த பயணிகள் ரயில் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு மெதுவாக இயக்கப்பட்டு சுமாா் 5 மணிக்கு அம்பாசமுத்திரம் நிலையத்துக்கு வந்து நிறுத்தப்பட்டது. பின்னா் திருநெல்வேலியிலிருந்து என்ஜின் கொண்டு வரப்பட்டு, ரயிலில் பொருத்தப்பட்டு 5.50 மணிக்கு திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றது.

இதையடுத்து, மாலை 4.25 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வந்து சேரவேண்டிய பயணிகள் ரயில் 2 மணிநேரம் காலதாமதமாக 6.27 மணிக்கு வந்து சோ்ந்தது. இதனால் 6.30மணிக்கு திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட வேண்டிய ரயில் 6.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

என்ஜின் பழுதால் தாமதமாக ரயில் இயக்கப்பட்டதால் திருநெல்வேலியிலிருந்து இணைப்பு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.