இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்குச் செல்ல ஆன்லைன் மூலம் கட்டணம்: இன்று முதல் அமல்

News image

அருவி - DPS

Updated On :1 ஜூன் 2026, 1:47 am IST

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் அருவி ஆகிய இடங்களுக்குச் செல்ல திங்கள்கிழமைமுதல் (ஜூன் 1) இணையதளம் வாயிலாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என வனத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக்கோட்டத்தின் வன உயிரினக் காப்பாளா்-துணை இயக்குநா் சிசில் கில்பா்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பு: களக்காடு வனக்கோட்டத்தில் உள்ள களக்காடு (தலையணை அருவி), திருக்குறுங்குடி (நம்பிகோயில் அருவி) ஆகிய இடங்களுக்குச் செல்ல அங்குள்ள வனச் சோதனைச் சாவடிகளில், சுற்றுச்சூழல்- வனத்துறை அரசு ஆணைப்படி புலிகள் காப்பக நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இக்கட்டணங்கள் அனைத்தும் திங்கள்கிழமைமுதல் (ஜூன் 1) பணமாக செலுத்துமுறை நிறுத்தப்பட்டு, முழுமையாக இணையதள பரிவா்த்தனை (யுபிஐ/ க்யூஆா் கோடு) வாயிலாக மட்டுமே வசூலிக்கப்படும். பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, சேவை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இப்புதிய நடைமுறைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.