பண்ணைவிளை மேல்நிலைப் பள்ளி அருகே இருபுறமும் தொடர் வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருங்குளம் அருகே உள்ள பண்ணைவிளை பங்களாவில் அமைந்துள்ள தக்கர் மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியின் இருபுறமும் சாலைகள் வளைந்து இருப்பதால் வாகனங்கள் வருவது தெரியாமல் மாணவ, மாணவியர் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், பள்ளியில் இருந்து பண்ணைவிளைக்கு செல்லும் வழியில் எஸ் வடிவிலான அபாய வளைவு உள்ளது. இதிலும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது.
இது குறித்து பலமுறை நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் அளித்தும், தற்பொழுது வரை வேகத்தடை அமைக்கப்படவில்லை.
எனவே விபத்தினால் உயிரிழப்பு ஏற்படும் முன், பண்ணைவிளை மேல்நிலைப் பள்ளியின் இருபுறமும் தொடர் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2026-ல் பணி ஓய்வுபெறுபவரா? ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன்பு அறிய வேண்டியது!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி படத்தின் டீசர்!

இன்றைய செய்திகள் ஜூன் 5 - நேரலை!
விடியோக்கள்

பாஜகவில் இருந்து விலகியது ஏன்?அரசியல் இயக்கம் தொடங்குவது ஏன்? Annamalai விளக்கம்!

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


