கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கு  நடைபெற்றது. 
Updated on
1 min read

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கு  நடைபெற்றது. 
சூரியஒளி மற்றும் அதன் பயன்பாடு என்ற தலைப்பில் இயற்பியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்து, தொடங்கி வைத்துப் பேசினார். விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் பிருத்விகுமரன்  சூரிய ஒளி மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் பேசினார்.  கருத்தரங்கில், கல்லூரியின் இயற்பியல் துறை மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com