சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:07 pm

DIN

கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு ஸ்ரீதேவி - நீலாதேவி உடனுறை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி  கோயில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி மற்றும் தாயார்  மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாலை 5 மணிக்கு சுவாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி முன்பு  இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.  தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி, தாயாருடன்  திருவீதியுலா நடைபெற்றது. பூஜைகளை வரதராஜ அய்யங்கார் செய்திருந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.