கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் திடீரென மரம் சரிந்து விழுந்தது. இதில், 6 மாணவர்- மாணவிகள் காயமடைந்தனர்.
இப்பள்ளியில் சுமார் 30 பேர் படித்துவருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆலமரம் புதன்கிழமை பிற்பகலில் திடீரென சரிந்து விழுந்ததாம். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3ஆம் வகுப்பு மாணவர் ஜான், மாணவி டென்சியா, மாலதி, மதுமிதா, அனுஷியா, 5ஆம் வகுப்பு மாணவி ஜான்சி ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தகவலின்பேரில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜேஸ்வரி, பள்ளி துணை ஆய்வாளர் செல்லகுருசாமி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து, மாணவர்- மாணவிகளிடம் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.