இசைமேதை ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகளின் 52ஆவது ஆண்டு இசை ஆராதனை விழா மற்றும் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நூல், ஆவணப்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் புதுச்சேரி பா. செயப்பிரகாசம், எட்டயபுரம் இளசைமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லப்பசுவாமிகள் கலை இலக்கிய இசை மன்றப் பொறுப்பாளர் இளையராஜா மாரியப்பன் வரவேற்றார்.
விழாவில், நல்லப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைவிடத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இசை அஞ்சலி நடைபெற்றது. தொடர்ந்து விழா மேடையில் நல்லப்பசுவாமி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், நல்லப்பசுவாமிகளின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் வெளியிட, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக அவைத்தலைவர் மு. சங்கரவேலு பெற்றுக்கொண்டார். நல்லப்பசுவாமிகளின் ஆவணப்படத்தை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் வெளியிட, மதுரை தியாகராஜர் கல்லூரியின் முதன்மை இசை ஆய்வாளர் நா. மம்மது, வேம்பு தொண்டு நிறுவன இயக்குநர் பங்குத்தந்தை லாரன்ஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நூல் தொகுப்பு ஆசிரியர் என்.ஏ.எஸ். சிவகுமார், ஆவணப்பட இயக்குநர் சி. மகேந்திரன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
விழாவில், வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல் வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய துரை, நல்லப்பசுவாமிகளின் வழித்தோன்றல் பி. பால்ராஜா, கலைமாமணி கைலாசமூர்த்தி, கலைவளர்மணி இசக்கியப்பன், கவிஞர் மா. மேனன், நல்லப்ப சுவாமிகள் இசைக்குழு பொறுப்பாளர் பி. சென்னையன், எட்டயபுரம் பரமானந்தம், பேராசிரியர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நல்லப்பசுவாமிகள் இசைக்குழுத் தலைவர் துரை அரசன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீலகிரியில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 95% பணிகள் நிறைவு: ஆ.ராசா எம்.பி.
கஞ்சா விற்ற இருவா் கைது: 4.5 கிலோ பறிமுதல்

கத்தியைக் காட்டி மிரட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கைப்பேசி திருடியவருக்கு 7 மாதங்கள் சிறை தண்டனை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


