எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய விழா

கி.ராஜநாராயணனின் 95ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் சாரிபில் கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 அக்டோபர் 2017, 12:56 am IST

கி.ராஜநாராயணனின் 95ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் சாரிபில் கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி பூங்கா சாலை தனியார் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க கிளைத் தலைவர் அபிராமி முருகன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் பொ. வேலுச்சாமி வரவேற்றார். சங்க மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் நோக்கவுரையாற்றினார்.  தொடர்ந்து, எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய முன்னொரு காலத்தில் என்ற தலைப்பிலான நூலை சங்கத்தின் மாநிலச் செயலர் சு. வெங்கடேசன் வெளியிட, அதன் முதல் பிரதியை கிளைத் தலைவர் அபிராமிமுருகன் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, புதுவை இளவேனில் இயக்கிய இடைசெவல் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்,  கி.ரா. ஒரு பல்கலைக்கழகம் என்ற தலைப்பிலும், எழுத்தாளர் எஸ். லட்சுமணப்பெருமாள் கி.ரா.வின் படைப்புகளில் மண்ணும், மனிதர்களும் என்ற தலைப்பிலும் பேசினர்.
தொடர்ந்து, மதரா இயக்கிய கதவு குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர், கி.ரா.வும், நானும் என்ற தலைப்பில் எழுத்தாளர்கள் பூமணி, வண்ணதாசன், சோ.தர்மன், கோணங்கி, வித்யாஷங்கர், மாரீஸ், சாரதி, பொன்னுராஜ், நாறும்பூநாதன், உதயசங்கர், ஜா.மாதவராஜ், பால்வண்ணம், தேவப்பிரகாஷ், பாலு, திடவை பொன்னுச்சாமி, முருகபூபதி, எஸ்.காமராஜ், சுவடி ஆகியோர் பேசினர். மு. மதியழகன் கி.ரா.வின் கதை என்ற தலைப்பில் பேசினார். எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலர் ஆனந்தன் வாழ்த்தினார். மாநிலச் செயலர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் வேரும், விழுதுகளும் என்ற தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து, புதுவை இளவேனில் இயக்கிய முன்னத்தி ஏர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சிகளை சங்க மாநிலத் துணைச் செயலர் அ. லட்சுமிகாந்தன் தொகுத்து வழங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் ராமசுப்பு நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள்சாமி, கோபால்சாமி, அய்யலுசாமி, பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.