ஸ்டெர்லைட் ஆலையால் நோய் பரவுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அரசு மருத்துவக் குழுவை அமைத்து உரிய ஆய்வு மேற்கொண்டு மக்களின் பயத்தை போக்க வேண்டும் என்றார் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அவர் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த ஆலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும், நிரந்தர மற்றும் தற்காலிகமாக ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் அங்கு பணியாற்றி வரும் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பரவுவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு மருத்துவக் குழுவை அமைத்து உரிய ஆய்வு மேற்கொண்டு மக்களின் பயத்தை போக்க வேண்டும்.
தூத்துக்குடியில் மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் தில்லி பயணம்!

வெள்ளியங்கிரி மலையேற்றம்: இன்று முதல் தற்காலிக நிறுத்தம்!

கார் - லாரி மோதி விபத்து: காவலர் உள்பட 6 பேர் பலி

தென்மேற்கு பருவமழை இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
