குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஸ்டெர்லைட் ஆலையால் நோய் பரவுவதாக புகார்: மருத்துவக் குழு அமைத்து ஆய்வு நடத்த வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையால் நோய் பரவுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அரசு மருத்துவக் குழுவை அமைத்து உரிய ஆய்வு மேற்கொண்டு

Updated On :18 ஏப்ரல் 2018, 7:01 am IST

ஸ்டெர்லைட் ஆலையால் நோய் பரவுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அரசு மருத்துவக் குழுவை அமைத்து உரிய ஆய்வு மேற்கொண்டு மக்களின் பயத்தை போக்க வேண்டும் என்றார் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அவர் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  அந்த ஆலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும்,  நிரந்தர மற்றும் தற்காலிகமாக ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் அங்கு பணியாற்றி வரும் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.  ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பரவுவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
 எனவே,  அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு மருத்துவக் குழுவை அமைத்து உரிய ஆய்வு மேற்கொண்டு மக்களின் பயத்தை போக்க வேண்டும்.
தூத்துக்குடியில் மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,  பள்ளி, கல்லூரி மாணவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.