இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி எட்டயபுரத்தில் வைகோ பிரசாரம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலர் வைகோ எட்டயபுரத்தில் பிரசாரம் செய்தார்.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:05 am IST

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலர் வைகோ எட்டயபுரத்தில் பிரசாரம் செய்தார்.
எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரன்குடி, வைப்பார், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வைகோ பிரசாரம்  மேற்கொண்டார்.  எட்டயபுரத்தில் அவர் பேசியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்து,  கொண்டுவந்தது ஜெயலலிதா தலைமையிலான  அதிமுக அரசு தான்.  தற்போது ஆலை விரிவாக்கத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை என தமிழக அரசு கூறுவது ஓர் ஏமாற்று வேலை. தமிழக அரசு மோடி சொல்வதை கேட்டு அனுமதி அளித்து விடும்.  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தான் எங்களின் பிரதான கோரிக்கை. 
வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிற ஸ்டெர்லைட் எதிர்ப்பு திறந்த வெளி மாநாட்டு பொதுக்கூட்டத்துக்கு பின்னரும் நிரந்தரமாக மூடவில்லை என்றால்  அடுத்த கட்ட நடவடிக்கையாக பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி போராடுவோம்.  எந்த அடக்குமுறை வந்தாலும் உடைத்து எறிந்து விட்டு ஸ்டெர்லைட் ஆலையை அகற்றாமல்  விடமாட்டோம் என்றார்.
நிகழ்ச்சியில்,  மதிமுக ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன்,  எரிமலை வரதன், மாவட்ட மாணவரனி செயலர்  ராஜசேகரன், காளிதாஸ், குறிஞ்சி, மணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
இதற்கிடையே, குளத்தூரில் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட  வைகோ வாகனத்தின் மீது சோடாபாட்டில் வீசப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இரண்டாம் நாளாக புதன்கிழமை மாலை 4 மணியளவில் கரிசல்குளம்,  காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குறுக்குச்சாலை ஆகிய இடங்களில் வைகோ பிரசாரம் மேற்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.