கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரியின் அறிவியல் மற்றும் மானுடவியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு,  கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.  கோவில்பட்டி போக்குவரத்து உதவி- ஆய்வாளர் சுடலைமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு,  சாலைப் பாதுகாப்பின் அவசியம்,  சாலை விபத்துக்கான காரணங்கள் குறித்தும்,  ஓட்டுநர் உரிமம் பெறாமலும், தலைக்கவசம் அணியாமலும் வாகனம் ஓட்டக்கூடாது என்றும்,  இருசக்கர வாகனத்தில் 3  பேர் பயணிக்கக் கூடாது. அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விபத்துக்களை தடுக்க ஒவ்வொருவரும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர். 
ஓய்வுபெற்ற வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.  பேராசிரியர் தம்பா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com