தூத்துக்குடியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க தமாகா வலியுறுத்தல்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெற்கு
Updated on
1 min read

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்,  தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தின்போது, தெற்கு மாவட்டத்தில் வாக்குச்சாவடி கமிட்டிகளை மாற்றி அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை தாமதமில்லாமல் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தாமிரவருணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
 கூட்டத்தில்,  மாவட்டச் செயலர் மூக்கன்சாமி,  துணைத் தலைவர் ரவிக்குமார், பொருளாளர் பாலசிங், வட்டாரத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com