தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 4) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர்புற மின்வாரிய செயற்பொறியாளர் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி அருகேயுள்ள கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 4) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி. தளவாய்புரம், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, பேரூரணி, திருவனந்தபுரம், அல்லிகுளம், கல்லன் பரம்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, கீழதட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம், ராசாமிபுரம், திம்மராஜபுரம், ஆண்டாள்நகர், தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







