ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கோயில் சொத்துகள், சிலைகளை  பாதுகாக்கக் கோரி நூதனப் போராட்டம்

கோவில்பட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் கோயில் சொத்துக்கள் மற்றும் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட

Updated On :20 ஆகஸ்ட் 2018, 7:41 am IST

கோவில்பட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் கோயில் சொத்துக்கள் மற்றும் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் சொத்துக்கள்,  சிலைகளை பாதுகாக்க வேண்டும்.  நிலங்களை பாதுகாக்க வேண்டும்,  காணாமல் போன சிலைகளை மீட்க வேண்டும்,  சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரணை நடத்தும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு நெருக்கடி கொடுத்து வரும் அதிகாரிகளை கண்டித்தும் கோவில்பட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் மனு அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணி பொதுச் செயலர் சுதாகரன்,  நகரச் செயலர் வெங்கடேஷன்,  தலைவர் சீனிவாசன்,  கயத்தாறு ஒன்றியத் தலைவர் ராஜமாணிக்கம்,  குருவிகுளம் ஒன்றியச் செயலர் முருகன், கழுகுமலை நகரப் பொதுச் செயலர் பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.