ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர்கள் - காவல் துறை கலந்தாய்வுக் கூட்டம்

கோவில்பட்டியில் போக்குவரத்து காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :23 ஜூலை 2018, 8:02 am IST

கோவில்பட்டியில் போக்குவரத்து காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமை வகித்தார். 
மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், காவல் துறை ஆய்வாளர் பவுல்ராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் கோவில்பட்டி நகர மற்றும் சுற்று வட்டார ஆட்டோ ஓட்டுநர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் சீருடை அணிந்து ஆட்டோக்களை இயக்கவேண்டும். ஆட்டோவை அதிவேகமாக ஓட்டிச் செல்லக் கூடாது. நகருககுள் அதிகம் ஒலி தரும் ஒலிப்பான்களை உபயோகிக்கக் கூடாது. ஆட்டோவில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது. 
குறிப்பாக, அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது. ஆட்டோவை நகருக்குள் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும்  ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் போக்குவரத்து சாலை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார்.  எனவே, அனைத்து வாகனங்களுக்கும் முறையாக சட்ட விதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், கோவில்பட்டி ரயில் நிலையத்திற்குள் முறையான அனுமதி ஏதுமின்றி சிற்றுந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும், அதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 
இதற்கு பதிலளித்த மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத் தங்கள் புகார்களை எழுத்துப்பூர்வமாக அளித்தால் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.