தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில், மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர்கள் மோகன், தங்கமாரியப்பன், பொருளாளர் ஜெபமாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலருமான கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு பேசினார். மக்களவைத் தேர்தலை சந்திக்க அனைத்து நிர்வாகிகளும் தயாராக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தின்போது, அதிமுக அரசின் சாதனைகளை கிராமங்கள் தோறும் கொண்டுச் சென்று பிரசாரம் செய்வது என்றும், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1593 வாக்குச்சாவடிகளிலும் பூத் முகவர் குழு அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலர் என். சின்னத்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், முன்னாள் வாரியத் தலைவர் இரா. அமிர்தகணேசன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலர் யு.எஸ். சேகர், மேற்கு பகுதிச் செயலர் ஏ. முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்குப் பிந்தைய சேவைகளுக்கு 1.6 லட்சம் போ் விண்ணப்பம்: சிபிஎஸ்இ

ராணிப்பேட்டை: மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம்!
ஈஷா யோக மையத்தில் இளைஞா் தற்கொலை
முதல்வருக்கு கீரை அனுப்பும் போராட்டம்: தமிழ்ப் புலிகள் கட்சியினா் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


