ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சாலை விரிவாக்கம் கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை எட்டயபுரம் சாலை சந்திப்பில் இருந்து கடம்பூர் வரை சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி பகத்சிங் மன்றத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :24 ஜூலை 2018, 12:55 am IST

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை எட்டயபுரம் சாலை சந்திப்பில் இருந்து கடம்பூர் வரை சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி பகத்சிங் மன்றத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  பகத்சிங் மன்ற கோவில்பட்டி ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மன்றத்தின் ஆட்டோ தொழிற்சங்க வட்டச் செயலர் கொம்பையா தலைமை வகித்தார்.   விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீத்தாராமன், பெண்கள் பாதுகாப்புக் குழு வட்டத் தலைவர் சுந்தரி, நரிக்குறவர் சங்க மாவட்டச் செயலர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 
  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்   கோவில்பட்டி- எட்டயபுரம் சாலை- மந்தித்தோப்பு சாலை சந்திப்பில் இருந்து கடம்பூர் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்,  சாலை விரிவாக்கப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 
 இதில், டிப்பர் சங்க வட்டச் செயலர் காளிராஜ், விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் சின்னச்சாமி, மன்ற உறுப்பினர்கள் கணேசன், சேதுராமசாமி, அழகர், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.