தூத்துக்குடியில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள கிருஷ்ணராஜபுரம் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ் (59). இவர், கீழவைப்பார் ஆர்.சி. பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். காயமடைந்த அந்தோணி துரைராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த தாளமுத்துநகர் போலீஸார், அந்தோணி துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தக் கொலை தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படையில் விருப்ப ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரான டி. சவேரியார்புரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






