நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா: நாளை கொடியேற்றம்

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத்

Updated On :22 அக்டோபர் 2018, 7:59 pm

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா புதன்கிழமை (அக்.24)  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும். 
அதையடுத்து, சுவாமி, அம்பாளுக்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும், தொடர்ந்து 5.30  மணிக்கு மேல் கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறும். இரவு 7.30  மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெறும்.
திருவிழா நாள்களில் தினமும் காலை மற்றும் இரவில் அம்மன் பல்வேறு வாகனத்தில் திருவீதியுலா நடைபெறும். 9ஆம் திருநாளான நவம்பர் 1ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டமும், இரவு 8  மணிக்கு அன்ன வாகனத்தில் அம்பாள் வீதியுலாவும் நடைபெறும். 12ஆம் திருநாளான நவம்பர் 4ஆம் தேதி காலை 8  மணிக்கு பல்லக்கில் அம்பாள் திருவீதியுலா நடைபெறும். மாலை 7  மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப் பிரவேசம் நடைபெறும்.
திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி, கோயில் முன்பு அமைந்துள்ள பிராமண மகாசபை காயத்ரி மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, செயல் அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.