எட்டயபுரம் வட்டம், வேலிடுபட்டி கிராமத்தில் காலியாக உள்ள கிராம பணியாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை திரண்டனர்.
வேலிடுபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுமதி, சிங்கிலிப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து, வேலிடுபட்டி கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, சிங்கிலிபட்டி கிராம நிர்வாக அலுவலரை கூடுதலாக வேலிடுபட்டி கிராம நிர்வாக அலுவலகப் பணியையும் கவனிக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் அயன்வடமலாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அ.வரதராஜன் தலைமையில், அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.
பின்னர், கோரிக்கை மனுவை உதவியாளர் பாலுவிடம் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், தங்கள் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலி!

ஏர் இந்தியா சேவையில் தினசரி 100 விமானங்களைக் குறைக்க முடிவு?

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: 40 மயில்கள் உயிரிழப்பு

என் சினிமா வாழ்க்கையை அழிக்க சிலர் முயன்றனர்: கௌதம் மேனன்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

