கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 15 நிமிடம் பெய்த பலத்த மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் பிற்பகல் சுமார் 1.30 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மாலை 4 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை கால் மணி நேரம் நீடித்தது. இந்த மழையினால் கோவில்பட்டி பசுவந்தனை சாலை, பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கழிவுநீருடன் சாலையில் ஓடத்தொடங்கியது.
தற்போது தொடங்கியுள்ள மழையிலே கழிவுநீருடன் மழைநீர் சாலையில் ஓடுகிறது. எனவே, மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஓடைகளையும் தூர்வார வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள், பாதசாரிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

