தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக ஊடகப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் செய்துவரும் சிறப்பான வேலைகளில் சில நிகழ்வுகள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியவருகிறது. சில நிகழ்வுகள் பொதுமக்களின் கவனத்துக்கு வருவதில்லை.
ஆகவே, பெரும்பாலான பொதுமக்கள் அறியவேண்டும் என்பதற்காக சமூக ஊடகப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சார்பு ஆய்வாளர் சத்திய நாராயணன் தலைமையில் காவலர்கள் முத்துமாரியப்பன், ரகுபதி மற்றும் அருண்ராஜ் ஆகியோரை கொண்டு இந்தப் பிரிவு செயல்படும்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இரவு, பகல் பாராமல் பொதுமக்களின் நன்மைக்காக பாடுபடும் காவல்துறையினரின் அரிய செயல்களை பொதுமக்களுக்கு வாட்ஸ் ஆப், முகநூல் மற்றும் இதர ஊடகங்கள் மூலமாக இந்தப் பிரிவினர் வெளிப்படுத்துவார்கள்.
அதேபோல, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை பதிவிடுவார்கள். இந்தப் பிரிவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய வாட்ஸ் ஆப் குழுக்களுடன், தங்களை இணைத்துக்கொண்டு மாவட்டத்தின் மொத்த தகவல்களை சேகரித்து வெளியிடுவார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்ற இனியன் பன்னீர்செல்வம்!

மத்திய அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: கார்கே

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

அண்ணன் இளையராஜாவைப் பற்றி தவறாக பேசாதீர்கள்: கங்கை அமரன்
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


