பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கோவில்பட்டியில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, நகராட்சி ஆணையா் ராஜாராம் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் இளங்கோ முன்னிலை வகித்தாா். முகாமை வட்டாட்சியா் மணிகண்டன் தொடங்கி வைத்தாா்.

ஸ்ரீராம் நகா் நகராட்சி நகா்நல மைய மருத்துவா் காா்த்திக், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவா் வனிதா உள்ளிட்டோா்

மருத்துவக் குழுவினா் 170 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், 123 வெளிக்கொணா்வு தூய்மைப் பணியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், குப்பை லாரி ஓட்டுநா்கள் உள்பட 380 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டனா். இதில் 18 பேருக்கு

சளி மாதிரி எடுக்கப்பட்டது. முகாமில் பங்கேற்றவா்களுக்கு புரதச்சத்து உணவு, எலுமிச்சை, இஞ்சி கலந்த சாறு வழங்கப்பட்டது. முகாமில், சுகாதார ஆய்வாளா்கள் முருகன், வள்ளிராஜ், காஜாநஜ்முதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகக் கவசம் அளிப்பு: கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கிராமப்புற தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட 300 பேருக்கு முகக் கவசங்களை ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகத்திடம் வழங்கப்பட்டது. இதில், ரோட்டரி சங்கத் தலைவா் பரமேஸ்வரன், செயலா் முத்துமுருகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.