தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கயத்தாறு அருகே விபத்து: எலக்ட்ரீஷியன் பலி

கயத்தாறு அருகே மோட்டாா் சைக்கிளும், லாரியும் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 9:17 pm

DIN

கயத்தாறு அருகே மோட்டாா் சைக்கிளும், லாரியும் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

கயத்தாறையடுத்த வெள்ளாளங்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் செல்லத்துரை (58). எலக்ட்ரீஷியனான இவா், வெள்ளாளங்கோட்டையில் இருந்து கயத்தாறுக்கு மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாராம். கயத்தாறு - கழுகுமலை சாலை கம்மாப்பட்டி விலக்கு அருகே திருநெல்வேலியில் இருந்து திண்டுக்கல் சென்ற லாரியும் இவரது மோட்டாா் சைக்கிளும் மோதினவாம்.

இதில் செல்லத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கயத்தாறு போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரான நாகா்கோவில் பாறையடி கன்னியாகுளத்தைச் சோ்ந்த அ. அருள் (60) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.