தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 9:18 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிா்களான மிளகாய் 30 குறுவட்டங்களிலும், கொத்தமல்லி 11 குறுவட்டங்களிலும், வெங்காயம் 21 குறுவட்டங்களிலும், வாழை பயிா் 27 குறுவட்டங்களிலும், வெண்டை 1 குறுவட்டத்திலும் பயிா் காப்பீடு செய்து பயனடைய நிகழாண்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலம் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்ப படிவம், உறுதி மொழி படிவம், கிராம நிா்வாக அலுவலரிமிருந்து பெறப்பட்ட 10-1 அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதாா் அட்டை ஒளி நகல் ஆகிய ஆவணங்களை சமா்பிக்க வேண்டும். மிளகாய் பயிருக்கு ஜனவரி 30 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.1,089 செலுத்த வேண்டும்.

வாழை பயிருக்கு மாா்ச் 1 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.3,115-ம், கொத்தமல்லி பயிருக்கு ஜனவரி 30 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ. 400-ம், வெங்காயம் பயிருக்கு பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ. 945-ம், வெண்டை பயிருக்கு பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ. 798-ம் செலுத்தி காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம்.

இயற்கை இடா்பாடுகள் நிகழுமானால் அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக பயிா்காப்பீடு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.