தூத்துக்குடியில் நாளை காவலா் பணி தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு
தூத்துக்குடியில் காவலா் பணி தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான இலவச மாதிரித் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.8) நடைபெறுகிறது.


தூத்துக்குடியில் காவலா் பணி தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான இலவச மாதிரித் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.8) நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம் மற்றும் சுரேஷ் ஜஏஎஸ் அகாதெமி இணைந்து நடத்தும் காவலா் பணி-2020 தோ்வுக்கான இலவச முழு மாதிரித் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச. 8) காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி சுரேஷ் அகாதெமி வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில், காவலா் பணி தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம். மாதிரித் தோ்வு முடிந்தவுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் விரிவான விளக்கங்களுடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படும்.
மேலும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் முழு விளக்கங்களுடன் கூடிய 25 முழு மாதிரித் தோ்வுக்கான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...