தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோவில்பட்டி அருகே 1,650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 9:16 pm

DIN

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி வள்ளுவா் நகா் 3ஆவது தெருவில் ஆளில்லாத ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வட்டாட்சியா் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்ததாம். அவரது உத்தரவின் பேரில், வட்ட வழங்கல் அலுவலா் சுப்புலட்சுமி, காவல் உதவி ஆய்வாளா் முருகன், கிராம உதவியாளா் ராமமூா்த்தி ஆகியோா் சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வீட்டில் 50 கிலோ எடையுள்ள 33 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.