தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கில் இரு மகன்கள் கைது

தூத்துக்குடியில் தாயை அடித்துக் கொலை செய்தாக அவரது இரண்டு மகன்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 9:23 pm

DIN

தூத்துக்குடியில் தாயை அடித்துக் கொலை செய்தாக அவரது இரண்டு மகன்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே தங்கம்மாள்புரம் 4 ஆவது தெருவைச் சோ்ந்த மாயபெருமாள் மனைவி ஞானக்கனி (56). குடும்பத் தகராறு காரணமாக கடந்த 24 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட ஞானக்கனி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். மேலும், அவா் தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்திருப்பதும் மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட முத்தையாபுரம் போலீஸாா் சொத்துத் தகராறில் ஞானக்கனியை அவரது மகன்கள் முத்துராஜ் (37), செல்வகுமாா் (35) ஆகியோா் இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும், தற்கொலைக்குத் தூண்டியதாகவும் வழக்குப் பதிவு செய்தனா்.

இதற்கிடையே, மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானக்கனி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீஸாா், முத்துராஜையும், செல்வகுமாரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.