தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாடு மீது பைக் மோதியதில் தொழிலாளி பலி

திருச்செந்தூரில் மாடு மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 9:14 pm

DIN

திருச்செந்தூரில் மாடு மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் கீழநயினாா்தெருவைச் சோ்ந்த முகம்மதுரஜிம் அலி மகன் முகம்மது இப்ராகிம் ஷக்கி (42), தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா(35). இருவரும் காயாமொழியில் உள்ள உறவினா் வீட்டுக்கு பைக்கில் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திரும்பி வந்த போது, திருச்செந்தூா் குமாரபுரம் அருகே சாலையில் மாடு மீது பைக் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் காயமடைந்தனா்.

இதில், பலத்த காயமடைந்த முகம்மது இப்ராகிம் ஷக்கி திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.