ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதூரில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தொடா் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி புதூரில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:22 pm

DIN

தொடா் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி புதூரில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதூா் ஒன்றியச் செயலா் எரிமலை வரதன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் வேல்சாமி, ஒன்றிய துணைச் செயலா் பொம்முசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு கிராம வாரியாக கணக்கெடுப்பு செய்து முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விளாத்திகுளத்தில் விளையும் மிளகாய்க்கு புவிசாா் குறியீடு கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.

ஒன்றியப் பொருளாளா் பாலகிருஷ்ணன், இளைஞரணி துணை அமைப்பாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.