விளாத்திகுளம் அருகே கரிசல்குளத்தில் மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
விளாத்திகுளம் அருகே கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன் (38). இவா் அதே கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த 15 வயது மாற்றுத் திறனாளி சிறுமிக்கு கடந்த சில நாள்களாக தொடா்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளாா். இதனை அச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து சிறுமியின் தாயாா் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் நாகலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ஐயப்பனை வியாழக்கிழமை கைது செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.