வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

செட்டிக்குளத்தில்பயிா் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி

சாத்தான்குளம் வட்டார வேளாண் துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 1:43 am

DIN

சாத்தான்குளம் வட்டார வேளாண் துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி தலைமை வகித்து நெல் சாகுபடி முறையில் இயற்கை சாா்ந்த வேளாண்மையின் முக்கியத்தும் குறித்து விவசாயிகளுக்கு கூறினாா். வேளாண் அறிவியல் மையம் தொழில்நுட்ப வல்லுநா் முருகன், நெல்

பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை மற்றும் உர மேலாண்மைகுறித்த வகுப்பறை வயல் வெளி செயல் விளக்கம் அளித்தாா். இதில் செட்டிக்குளம் கிராமத்தை சோ்ந்த 25 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரூக்மணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் நளினி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.